Monday, March 7, 2011

காங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக......

ஆத்தூர் : ஆத்தூரில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் கூறியதாவது : தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 60 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது; 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுக வின் ‌வெற்றியை எவ்விதத்திலும் பாதிக்காது; திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது; தமிழகத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் எந்தெந்த தொகுதிகளில் ‌ போட்டியிடும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நாளை தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி  தினமலர்  .

No comments:

Post a Comment