ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 4 மணி அளவில் அவினாசி ஒன்றிய கட்சி அலுவலகத்தில் மர்ப நபர்களால் தீ வைக்கபட்டது . தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S .கணேஷ் , R . A . சுந்தரம் , விநாயக செல்வம் , அவினசியப்பன் , சுதர்சன் கந்தசாமி , மெடிக்கல் மூர்த்தி , ரவிசங்கர் , ராஜ் மாணிக்கம் மற்றும் பல நிர்வாகிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் பின்பு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் அதன் பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர் , கோவை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர் . பின்பு அனைத்து நிர்வாகிகளும் சென்று நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது . அன்று மாலை சக்தி கோச் நடராஜ், சூர்யமூர்த்தி , K.K.C. பாலு , இளம்பரிதி , சந்திரசேகர் , விசா சண்முகம் , மாணிக்கராஜ் , ரோபோ ரவி , தம்பி வெங்கடாசலம் , ஆத்தூர் ரமேஷ் , விஸ்வநாதன் மற்றும் பல மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் பாதிப்படைந்த அலுவலகத்தை பார்வையிட்டனர்.