Wednesday, December 12, 2012

அவினாசி ஒன்றிய கொடியேற்று விழா



( 09.12.2012) ஞாயிற்றுகிழமை அவினாசி ஒன்றியத்தில்( செம்பியநல்லூர் ,நம்பியாம்பாளையம், கருவலூர்,உப்பிலிபாளையம் , ராமநாதபுரம் மற்றும் கானூர் பஞ்சாயத்துகளில்) கொடியேற்று விழா நடைபெற்றது ... நமது கொங்குநாட்டு தளபதி ஈ .ஆர். ஈஸ்வரன் அவர்கள்  அனைத்து கிளைகளிலும் கொடியேற்றினார் ....
மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுகுட்டி தலைமை தாங்கினார் .

மாநில அவைத்தலைவர் B.R.T.சென்னியப்பன் ,
மாநில பொருளாளர்  K.K.C. பாலு ,
மாநில தலைமை நிலைய செயலாளர்  சூர்யமூர்த்தி ,
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்  V .லோகநாதன்
ஒன்றிய செயலாளர்  கணேசன் ,
ஒன்றிய தலைவர் பூமகள் செல்வராஜ் ,

நகர செயலாளர்  மூர்த்தி ,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  சுதர்சன் கந்தசாமி ,
மாவட்ட செயற்குழு  உறுப்பினர்  விநாயக செல்வராஜ் ,
மாவட்ட செயற்குழு  உறுப்பினர் R .A .சுந்தரம் ,
ஒன்றிய மாணவரணி செயலாளர் A .ரவி சங்கர்
ஒன்றிய பொருளாளர்  அவினாசியப்பன்,
ஒன்றிய துணை செயலாளர் சென்னியப்பன் ,
 ஒன்றிய துணை செயலாளர் ராயப்பன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..

Wednesday, August 15, 2012

ஆகஸ்ட் 7  ஆம் தேதி காலை 4  மணி அளவில் அவினாசி  ஒன்றிய கட்சி அலுவலகத்தில் மர்ப நபர்களால் தீ வைக்கபட்டது . தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S .கணேஷ் , R  . A . சுந்தரம் , விநாயக செல்வம் , அவினசியப்பன் , சுதர்சன் கந்தசாமி , மெடிக்கல் மூர்த்தி , ரவிசங்கர் , ராஜ் மாணிக்கம்  மற்றும் பல  நிர்வாகிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் பின்பு தீயணைப்பு  துறையினர்  விரைந்து வந்து தீயை அணைத்தனர்  அதன் பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்  விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர் , கோவை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர் . பின்பு அனைத்து நிர்வாகிகளும் சென்று நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது . அன்று  மாலை சக்தி கோச்  நடராஜ், சூர்யமூர்த்தி , K.K.C. பாலு , இளம்பரிதி , சந்திரசேகர் , விசா சண்முகம் , மாணிக்கராஜ் , ரோபோ ரவி , தம்பி வெங்கடாசலம் , ஆத்தூர் ரமேஷ் , விஸ்வநாதன் மற்றும் பல மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் பாதிப்படைந்த அலுவலகத்தை பார்வையிட்டனர்.

Wednesday, April 18, 2012

சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா





சென்னை  கிண்டியில்   தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது ...... கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி , கழக பொது செயலாளர்   E .R .ஈஸ்வரன் , கழக பொருளாளர்  பாலசுப்ரமணியம் , கொங்கு வேளாளர்  கவுண்டர்  பேரவை தலைவர்  தேவராஜ் அய்யா மற்றும் பல மாநில , மாவட்ட , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ... பின்னர் தீரன் சின்னமலை  சிலைக்கு  தலைவர்கள்  மாலை அணிவித்தனர் .... அதன் பின் சைதாபேட்டையில்  கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாக  கூடங்குளம்  மின் பிரச்சனைக்காக  ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது .. 5000 பேர்க்கு  மேலாக ஆர்பாட்டத்தில்  கலந்து கொண்டனர் .... அவினாசி  ஒன்றியத்தின் சார்பாக  V .லோகநாதன் , விநாயக செல்வம் , R .A .சுந்தர், மெடிக்கல் மூர்த்தி , S .கணேஷ் ,அவினசியப்பன் ,  ரவி சங்கர் , சுந்தர் , கோவிந்தராஜ் , ரமேஷ் , ஸ்ரீதர் , சதீஷ் , முருகேஷ் ,ஆனந்த் , ராயப்பன்  மற்றும் கிளை நிர்வககள் உள்பட 70  பேர் கலந்து கொண்டனர் .......

நன்றி ! நன்றி !  
கொங்கு சங்கர் 

Friday, March 9, 2012

மின்வெட்டை கண்டித்து அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்



அவினாசி ஒன்றிய , நகர  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  சார்பாக , தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டு  மற்றும்  பல்வேறு  பிரச்சனைகள்  சம்மந்தமாக 09 /03 /2012  அன்று  காலை 09 -00  மணியளவில்  அவினாசி பாலச்சந்தர்  மருத்துவமனை  அருகில் " மாபெரும்  ஆர்ப்பாட்டம் " நடைபெற்றது .
                               ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.பொன்னுகுட்டி அவர்கள்  தலைமை  தாங்கினார் , மாநில செயற்குழு  உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர்  வடக்கு மாவட்ட  செயலாளர்  திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ்  ,ஒன்றிய  செயலாளர் 
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர்  திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர்  திரு.ரோபோ ரவி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர் .
                              சிறப்பு  அழைப்பாளராக மாநில துணை பொருளாளர் 
திரு.G .K .நாகராஜ் அவர்கள்  கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும்  கோரிக்கைகள்  முன்வைத்து  முழக்கங்கள்  எழுப்பப்பட்டன .
  • தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டை  உடனடியாக  தளர்த்தி  தடையில்லா மின்சாரம்  வழங்கவேண்டும் .
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
  • விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம்  செய்யவேண்டும் .
  •  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  ஆவண செய்ய வேண்டும் .
ஆர்பாட்டத்தில்  திரளான  மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பேச்சாளர் திரு .ஜெயச்சந்திரன் நாயக்கர் நன்றி  கூறினார் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
                                                                                                

Wednesday, March 7, 2012

கொங்கு நாட்டு காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா அவர்களின் 68 வது பிறந்தநாள்




இன்று   68 வது பிறந்தநாள் காணும்  நமது கொங்கு நாட்டு  காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா  அவரை  வாழ்த்த வயதின்றி  வணங்குகிறோம் ....அவரின்  அயராத  உழைப்பு  கொங்கு நாட்டிற்கு  தேவை .... அவர் பல்லாண்டு  வாழ எல்லாம்  வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..........
நன்றி! நன்றி !      
கொங்கு சங்கர் 





Monday, March 5, 2012

அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்


  •  தமிழ்நாட்டில் (சென்னை  தவிர ) நிலவி வரும் அபரிமிதமான  மின்வெட்டை உடனடியாக தளர்த்தி  தடையில்லா மின்சாரம் வழங்க  மாநில அரசை கோரியும் , கரும்பு  மஞ்சள் உட்பட...... 
  •  விவசாய்  விளைபொருட்களுக்கு  மாநில அரசு நியாயமான  விலை  நிர்ணயம்  செய்யகோரியும் ......
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு  தடையில்லா மும்முனை  மின்சாரம்  வழங்ககோரியும் .......
  •  ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  கோரியும் ........
                     மாபெரும்  ஆர்பாட்டம்  நடைபெறுகிறது . எனவே , ஒன்றிய  நகர  கொ.மு .க வினர் , பொதுமக்கள் , பொது நலன்  நாடுவோர்  அனைவரும்  தவறாது கலந்து கொண்டு ஆதரவு  தர வேண்டுகிறோம் ....
  
நன்றி ! நன்றி !   
கொங்கு சங்கர் 

Saturday, March 3, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாபெரும் ஆர்பாடாம்

வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி  (வெள்ளி கிழமை) "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி" ஆர்பாட்டம் .

 தேதி :  09.03.2012
 இடம்  : பாலச்சந்தர்  மருத்துவமனை , அவினாசி 
 நேரம் : காலை 9  மணி  

நன்றி !! நன்றி !! 
கொங்கு சங்கர்
 

Sunday, February 26, 2012

கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்


அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு  கூட்டம்  கருவலூர்  கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6  மணிக்கு  நடைபெற்றது . கூட்டத்திற்கு  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
 V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார  நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .

 கருவலூர்  ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : N .ரங்கசாமி 
செயலாளர்  : A .பழனிசாமி  

உப்பிலிபாளையம்   ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : கந்தசாமி
செயலாளர்  : M .சிவசாமி 

ராமநாதபுரம்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : P .சண்முகம்

செயலாளர்  : M .மணி (எ ) நாராயணசாமி 

கானூர்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : A.சிவசுப்ரமணியம்

செயலாளர்  : P .வேலுசாமி 

நம்பியாம்பாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       : ராமசாமி

செயலாளர்   : M .குருசாமி 

வேட்டுவபாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       :  ஆண்டவ மூர்த்தி 

செயலாளர்   :   சுப்பிரமணியம் 


வட்டார பிரதிநிதிகள் 

செயலாளர்  : M .தர்மராஜ் 
 மயில்சாமி 
 நந்தகுமார்
 S .சம்பத் 
 S .காந்தி  

                                                                                                                                 நன்றி 
                                                                                                                        கொங்கு சங்கர் 
                                

Sunday, February 19, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  அவினாசி ஒன்றியம்  மற்றும்  நகர  கலந்தாய்வு  கூட்டம்  " பூவாசாமி கவுண்டர்  நினைவு "  திருமண  மண்டபத்தில்  19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு  நடைபெற்றது.
 கூட்டத்தில்.......
              
  •  ஒன்றிய  நகர  நிர்வாகிகள்  தேர்வு .
  • அபரிமிதமான  மின்வெட்டுக்கு  எதிரான  ஆர்ப்பாட்டம் பற்றிய  ஆலோசனை .
  •  விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் .  
போன்ற   விசயங்கள் குறித்து  கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில்  V.லோகநாதன் , S . கணேஷ் , விநாயக செல்வம் , R .A .சுந்தரம் , மெடிக்கல் மூர்த்தி , அவினசியப்பன் , சேயூர்  நடராஜ் , குழந்தையப்பா கவுண்டர், ராயப்பன் , பூமகள்  செல்வராஜ் , மாணிக்கம் , P.K.ராஜ்  மற்றும்  ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் .

இறுதியில்  அவினாசி  ஒன்றிய  செயலாளராக  சங்கம்பாளையம்  S .கணேஷ்  அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். 
வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி   "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி"  ஆர்ப்பாட்டம் .  
                                                     நன்றி ! நன்றி ! 

Saturday, February 18, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் 4 ஆம் ஆண்டு விழா


திருப்பூர் வடக்கு மாவட்டம்  அவினாசி  ஒன்றியத்தில் கொங்குநாடு  முன்னேற்ற கழகத்தின்   4 ஆம் ஆண்டு விழா  கொடியேற்றி சிறப்பாக கொண்டாடபட்டது...விழாவில்  வடக்கு மாவட்ட செயலாளர்  V.லோகநாதன் , விநாயக செல்வம் ,  R.A.சுந்தரம் , அவினாசியப்பன் , ரவி சங்கர் மற்றும்  ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர் .

Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு பிரச்சனைகாக தேனியில் கொ.மு.க ஆர்பாட்டம்

முல்லை  பெரியாறு பிரச்சனைக்காக கொங்கு நாடு  முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர்  E.R.ஈஸ்வரன்  அண்ணன்  தலைமை யில் , கழகத்தின்  பொருளாளர்  பாலாசுப்ரமணியம்  மற்றும் பேரவையின் தலைவர் திருச்சி  தேவராஜ்  அய்யா  அவர்களின் முன்னிலையில் நாளை (07.01.2012) தேனியில்  ஆர்ப்பாட்டம் .

இடம்  : பகவதி அம்மன்  கோவில் , தேனி

 நாள் : 07.01.2012(நாளை )

 நேரம் : மதியம் 2  மணிக்கு

 அனைவரும்  வாரீர் !!