Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு பிரச்சனைகாக தேனியில் கொ.மு.க ஆர்பாட்டம்

முல்லை  பெரியாறு பிரச்சனைக்காக கொங்கு நாடு  முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர்  E.R.ஈஸ்வரன்  அண்ணன்  தலைமை யில் , கழகத்தின்  பொருளாளர்  பாலாசுப்ரமணியம்  மற்றும் பேரவையின் தலைவர் திருச்சி  தேவராஜ்  அய்யா  அவர்களின் முன்னிலையில் நாளை (07.01.2012) தேனியில்  ஆர்ப்பாட்டம் .

இடம்  : பகவதி அம்மன்  கோவில் , தேனி

 நாள் : 07.01.2012(நாளை )

 நேரம் : மதியம் 2  மணிக்கு

 அனைவரும்  வாரீர் !!





Wednesday, December 28, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 81 வது பிறந்த நாள்

கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்களின் பொன்மொழிகள்:


ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

இந்தியா என்பது கிராமங்களில்தான் உள்ளது. அந்த கிராமத்து உயிர்களால் தான் நாடே வாழ முடியும் என்பது அடிப்படை உண்மை. இது பெரிய படிப்பாளிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னமும் கிராம மக்களுக்கு முன்னேற்றம் என்பது கனவாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வில்லை. நம்முடைய பரம்பரை தொழிலே விவசாயம் தான். ஒரு காலத்தில் விவசாயத் தொழிலுக்கு மதிப்பும், மரியாதையும், பெருமையும் இருந்தது. வள்ளுவர் கூட உலகமே உழவர்கள் பின்னால் இருப்பதாக கூறினார். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற தொழில்களிலே மிகவும் மோசமான தொழிலாக விவசாயம் வந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மேலும் இந்தியாவின் ஒரு பகுதி மழை பெய்து வெள்ளத்தால் அழிகிறது. மற்றொரு பகுதியில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எதிர்கால நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படும் ஆட்சி இல்லாததுதான் இதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெரும்பான்மையாக உள்ள நமது இனத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பணிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், அரசின் நலத் திட்டங்களும் நம்மை முழுமையாக வந்து சேரும்.

இன்னும் பல,

-கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்கள்.!
 
முடியும் முடியும் நம்மால் முடியும்

கொங்கு செழித்தல்....!!!!
எங்கும் செழிக்கும்....!!!! 

Tuesday, March 22, 2011

2011 சட்டமன்றத் தேர்தலில் , கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

            சூலூர்  சட்டமன்றத்  தொகுதி  வேட்பாளர் 



பெயர்                  :        E .R .ஈஸ்வரன்  B.E .,                                                     
வயது                  :        50 
பெற்றோர்         :       இராமசாமி கவுண்டர் - முத்தாயி
மனைவி            :       திருமதி. நளினி  ஈஸ்வரன் 
குழந்தைகள்     :      சுஷ்மிதா , ஸ்வருபா
தொழில்             :       கட்டுமானம் , ஏற்றுமதி  ஆடை தயாரிப்பு 
கல்வி தகுதி     :       B.E .,  (Mech ) 





பெயர்                      :             K . பாலசுப்ரமணியம்                                             
வயது                      :             61
பெற்றோர்             :             P .P .கந்தசாமி கவுண்டர் - கந்தம்மாள் 
மனைவி                :             திருமதி . பத்மா
குழந்தைகள்         :             பிரபு , கார்த்திக்
தொழில்                 :             கனரக இயந்திர பாகம் , கோழி பண்ணை
கல்வி தகுதி         :             Engineer 


நாமக்கல்  சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் 


பெயர்                   :         R . தேவராசன்                                                   
வயது                   :         70
பெற்றோர்          :        போத்தி. இராமசாமிகவுண்டர்  - காளியம்மாள்
மனைவி             :        திருமதி . பழனியம்மாள்
குழந்தைகள்      :        இரு மகள்கள் , ஒரு மகன்
தொழில்              :         கட்டுமானத் தொழில் , டிரான்ஸ்போர்ட் 

     
  பெருந்துறை  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :        K .K .C . பாலு
வயது                      :        50
பெற்றோர்             :       K .K .C .சென்னியப்பன் - சரஸ்வதி
மனைவி                :       திருமதி .சித்திரகலா 
குழந்தைகள்         :       நந்தா 
தொழில்                 :       K .K .C . ட்ரான்ஸ்போர்ட்
கல்வி தகுதி         :       B.E ., ( ECE )


பொள்ளாச்சி  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :       நித்யானந்தம் 
வயது                      :      39
பெற்றோர்             :      B.கிருஷ்ணசாமி கவுண்டர்  
மனைவி                :      திருமதி. வனிதா 
குழந்தைகள்         :      ஷிவாணி
தொழில்                 :      ரியல் எஸ்டேட் , விவசாயம் 
கல்வி தகுதி         :     D.M.E ., B.E 
உடுமலை சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :      T. இளம்பரிதி
வயது                      :      50
பெற்றோர்             :     தி . திருமலைசாமிக் கவுண்டர் 
மனைவி                :     திருமதி . சாந்தி
குழந்தைகள்         :    கோகுல் 
தொழில்                 :     விவசாயம்
கல்வி தகுதி         :     D.M.E ., B.E


Wednesday, March 16, 2011

கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள்

மார்ச் 16 : கொமுக போட்டியிடும் தொகுதிகள்  இரவு 8  மணிக்கு  சென்னை  அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட்டது . இதில்  கொமுக வுக்கு

1 . சூலூர்
2 .பல்லடம்
3 . பொள்ளாச்சி
4 .உடுமலைபேட்டை
5 .பெருந்துறை
6 .கோபி
7 .நாமக்கல்
ஆகிய  தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன ..வேட்பாளர்  பட்டியலை  நாளை அல்லது  நாளை மறுநாள்  வெளியிடப்படும்  என  கொமுக மாநில தலைவர்  திரு.பெஸ்ட் ராமசாமி  கூறினார் .....

 

திமுக வுடன் கூட்டணி ஏன்- மாநில கொமுக பொருளாளர் விளக்கம்