Thursday, March 3, 2011

கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை


பண்டைய தமிழ் நாட்டில் தொழில் முறையில்
இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள்
வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில்
வேளாண்மை செய்தவர்கள் கொங்கு வெள்ளாளர்
என்றழைக்கப்பட்டனர். வேளாண்மை செய்தவர் என்ற
பொதுப்பிரிவில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு பிரிவினர் ஆயினர்.

திருமணங்களும், கொங்கு வெள்ளாளர் திருமணச் சடங்குகளும்:

கொங்கு வெள்ளாளர் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்று
நாட்கள் நடைபெற்று வந்தன. முதல் நாள், 'நாள் விருந்து'. இந்நாளில்
நெருங்கிய உறவினர் மணமகன், மணமகள் வீட்டார்க்கு விருந்து
செய்வர்.

இரண்டாம்நாள்

உறவினர்களுடன் இணைந்து மண ஏற்பாடுகள் செய்வர்.
பந்தலிடுதல், முகூர்தக்கால் வெட்டுதல், மணமகனுக்குக்
குடிமகன் முடிதிருத்துதல், கொட்டு முழக்கு வாயிலாகத்
திருமணம் நடைபெறத் தொடங்குவதை ஊரார்க்கு அறிவித்தல்,
மணமக்கள் வீட்டில் விருந்திடுதல், மணமகன் மணமகள்
வீட்டிற்குப் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மணமகள் வீட்டில்தான் மண ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாள்


முகூர்த்த நாள். உரிய சடங்குகள் முடிக்கப்பெற்று மணமக்கள்
மணமேடையில் அமர்த்தப் பெறுவர். மணமகளுக்கு மங்கல
நாண் அணிவிக்கப் பெற்று, மங்கல வாழ்த்து ஓத, திருமணம்
நிறைவுக்கு வரும். விருந்துடன் திருமணம் முடிவுறும்.

திருமண நிகழ்ச்சிகளை இனப் பெரியவர் ஒருவரான
அருமைக்குரியவர் நடத்தி வைப்பார்.


மங்கல வாழ்த்து பாடல்:

பெண் பார்ப்பதில் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலான
எல்லா நிகழ்ச்சிகளையும் இப்பாடல் தொகுத்துரைக்கிறது. ஒரு
பேரரசன் இல்லத் திருமணத்தை விவரிப்பது போல் பாடல்
கருத்துகள் உள்ளன. இப்பாடல் வழியாக அன்றைய கொங்கு
வெள்ளாளரின் நிலை, உறவு முறை, சமுதாய நிலை பற்றி நன்கு
அறிய முடிகிறது. தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியத்தோடு
வைத்து எண்ணப்பெறும் தகுதியை இது பெற்றிருக்கிறது.
அகவலில் அமைந்து, ஒரு தனித்த பண் வகையில் பாடப் பெறுகிறது.

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு இவர்கள் படைவாளெடுத்தால் வெற்றி அரசர் படைவாள் எடுக்கும் கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர் கனகராசியெலாம் குவிப்பர் காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்கைத்தொழில் எல்லாம் நடக்கும் உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன் உயிர்க்கெல்லா படி அளப்பான் ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று உலகில் ஒரு பெருமையுண்டோ?"

கொங்கு வேளாளர்
சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடியியல்,வாழ்வியல்,உழைப்பு,பண்பாடு,அறிவியல்,மருத்துவ அடிப்படையிலான சடங்குகள்,குணவியல்புகள்,ஆகிய வற்றையெல்லாம் கூறுகின்றன.

13ஆம் நூற்றாண்டில் விஜய ந‌க‌ர‌ப் பேர‌ர‌சு கொங்கு நாட்டை 24 நாடுக‌ளாக‌ப் பிரித்தாண்ட‌து.ஊர்த்த‌லைவ‌ர்க‌ள் பெய‌ரால் ஊர்க‌ள் அமைந்தன. த‌ற்கால அமைப்புப‌டி கோவை, சேல‌ம், க‌ரூர், நாம‌க்க‌ல், ப‌ல்ல‌ட‌ம், ப‌ழ‌னி, தாராபுர‌ம், த‌ர்ம‌புரி ஆகியன கொங்கு நாட்டில் அட‌ங்கி இருந்தன.

இந்திய வ‌ர‌ல‌ற்றில் விடுத‌லைப் போருக்கு முத‌லில் வித்திட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தாம்.த‌மிழ் நாட்டில் விடுத‌லைப்போருக்கு முன்னோடியாக இருந்து, வீர‌ம் விளைவித்ட‌வ‌ன் தீர‌ன் சின்ன‌ம‌லை.

தீர‌ன் சின்ன‌ம‌லை க‌ரியான் ச‌ர்க்க‌ரை ம‌ன்றடியாரின் பேர‌ன் ஆவார். மேல‌ப்பாளைய‌ம் காணியாளர் இர‌த்தின‌த்தின் ந‌க‌னாவார்.கி.பி.1756 இல் பிறந்தார். இவ‌ர் அண்ணன் குழ‌ந்தைசாமி, த‌ம்பிசாமி, கிலேதார், குட்டிசாமி ஆகிய மூன்று த‌ம்பிய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்.இவ‌ர‌து இய‌ற்பெய‌ர் தீர்த்த‌கிரி. வேளாண்குடியில் பிறந்திருந்தாலும் சிறுவ‌ய‌தில் சில‌ம்ப‌ம், வாள், வேல், ப‌யிற்சியில் ஈடுப‌ட்டார். தீர்த்தகிரி த‌ம்பியும், கிலேதாரும் இவ‌ருட‌ன் விட்ட‌ன‌ர். போர்ப் ப‌யிற்சியில் ஆர்வ‌ம்கொண்ட தீர்த்த‌கிரி திப்புவின் ப‌டையில் கி.பி.1775 இல் சேர்ந்தார். த‌ள‌ப‌தியானார். இர‌ண்டாவ‌து, மூன்றாவ‌து போர்க‌ளில் த‌ளப‌தியாக இருந்து ஆங்கில ப‌டைக‌ளை அழித்தார்.

கொங்கு நாட்டு வ‌ரிப்ப‌ணம் திப்புவுக்குச் செல்லாம‌ல் வழி ம‌றித்துப்பிடுங்கினார், ஆங்கிலேய‌ரின் வ‌ரிப‌ணத்தையும் பிடுங்கி கோவை நாட்டில் த‌னி அர‌சு அனமைத்து ஆண்டார். நொய்ய‌ல் ஆற்றின்மேல் க‌ரையில் ஓடாநிலையில் அரண்ம‌னையும், கோட்டைக‌ளையும் க‌ட்டினார்.கி.பி.1779 இல் திப்பு இறந்த‌பின் ஆறு ஆண்டுக‌ள் கொங்கு நாட்டை ஆண்டார். ஆங்கில ஆதிக்க‌த்தை எதிர்த்து நான்குபோர்கள் செய்து வெற்றி பெற்றார். கி.பி.1805 இல் வெள்ளைய‌ரின் வ‌ஞ்ச‌னை வ‌ளையில் சிறைப்ப‌ட்டார். ச‌ங்க‌கிரி கோட்டையில் தூக்கிலிட‌ப்ப‌ட்டார். அவ‌ர‌‌து உயிர்மூச்சு விடுத‌லைப் போருக்கு வித்திட்டது.

பண்டைய‌ கொங்குநாடுகள்‌‌

கொங்குநாடுகள்
இன்றைய‌ ப‌குதிக‌ள்

1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்ச‌ங்கோடு.

2)தென்க‌ரை நாடு
தாராபுர‌ம், காங்கேய‌ம்.

3)காங்கேய‌ நாடு
தாராபுர‌ம்,கரூர்.

4)பொங்க‌லூர் நாடு
ப‌ல்ல‌ட‌ம், தாராபுர‌ம்.

5)ஆறை நாடு
கோவை,அவினாசி.

6)வார‌க்கா நாடு
ப‌ல்ல‌ட‌ம் பொள்ளாச்சி

7)திருஆவின் ந‌ன்குடி நாடு
ப‌ழ‌னி, உடும‌லை.

8)ம‌ண நாடு
க‌ரூர் தென்மேற்குப‌குதி

9)த‌லையூர் நாடு
க‌ரூர் தெற்கு, மேற்கு

10)த‌ட்ட‌யூர் நாடு
குளித்த்லை

11)பூவாணிய‌ நாடு
ஓம‌லூர், த‌ர்ம‌புரி

12)அரைய‌ நாடு
ஈரோடு, நாம‌க்க‌ல்

13)ஒடுவ‌ங்க‌ நாடு
கோபி

14).வ‌ட‌க‌ரை நாடு
ப‌வானி

15).கிழ‌க்கு நாடு
க‌ரூர்,குளித்த‌லை

16).ந‌ல்லுருக்காநாடு
பஉடும‌லைப்பேட்டை.

17).வாழ‌வ‌ந்தி நாடு
நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர்

18).அண்ட‌ நாடு
ப‌ழ‌னி தென்கிழ‌க்கு

19).வெங்கால‌ நாடு
க‌ரூர் கிழ‌க்கு

20).காவ‌ழ‌க்கால‌ நாடு
பொள்ளாச்சி

21).ஆனைம‌லை நாடு
பொள்ளாசி தென்மேற்கு

22)இராசிபுர‌ நாடு
சேல‌ம், ராசிபுர‌ம், கொல்லிம‌லை

23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, ப‌வானி.

24)குறும்பு நாடு
ஈரோடு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

 குலதெய்வம்

குல(கூட்ட)ப் பிரிவுகள் சிறுப்பிரிவாக பிரிந்து தங்களும், தங்களுடைய சந்ததிகளும் வழிப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு பிடித்த சாமி சிலைகளை அமைத்தனர். அந்த சாமிகளை குலதெய்வமாக வழிப்பட ஆரம்பித்தனர். தற்பொழுது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிமை வாரிசுகளாக குலத்தெய்வக் கோவில்களுக்கு உள்ளனர் என்பது சிறப்பு. அவர்களே தங்களுடைய குலத்தெய்வக் கோவில்களை சில வருடங்களுக்கு ஒருமுறை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.

கொங்கு நாடு


வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு நாடு

கொங்கு நாடு , தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ள ஆட்சிப் பகுதியாகும். இங்கு கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகும். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களோடு திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பகுதியையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், துறையூர், முசிறி பகுதிகளையும், மைசூர் பகுதியையும் உள்ளடக்கியது. கொங்கு என்ற சொல்லுக்கு கொங்கர்நாடு (கங்கநாடு), என்று பொருள்.




வரலாறு

 

கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான், தமிழர்கள், முதன் முதலில் ஆட்சி முறைகளை அமைத்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகாமையில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - தருமபுரியின் அதியமான், கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கண்ணுவ குல மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் இப்பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்துவந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் உடையார்களின் ஆட்சிக்கு வந்தது. எனினும், மைசூர்ப் பேரரசின் கீழ் கவுண்டர்கள் ஆட்சி மற்றும் படை அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். தீரன் சின்னமலையின் இறப்பிற்குப் பின்னர், இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் கீழ் வந்தது.

பிராந்தியக் கிளர்ச்சி

 

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்,  இப்பகுதியில் தனிக் கொங்கு நாடு கோரிப் கிளர்ச்சி தொடங்கியது.

கொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

 மார்ச் 3 :  சட்டமன்ற  தேர்தலில்  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  திமுக கூட்டணியில்  இணைந்து போட்டியிடுகிறது .. கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு  7 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது .               

நமது  தலைவர்கள்  போட்டியிட விரும்பும் தொகுதிகள் :
                                          
                                               பொள்ளாச்சி
                                               சூலூர்
                                               பல்லடம்
                                              சிங்காநல்லூர்
                                              கரூர்
                                             அரவங்குறிச்சி
                                             திருச்சங்கோடு
                                            அந்தியூர்
                                            பெருந்துறை   

கொமுக  சார்பில்  மாநில  பொருளாளர்  பாலசுப்ரமணியம் , பொது செயலாளர்  E .R .ஈஸ்வரன் , கோவை  மாநகர் மாவட்ட  செயலாளர் ஜி.கே . நாகராஜ் , மாணவரணி செயலாளர்  லோகநாதன் , ஈரோடு மாவட்ட  செயலாளர்
K.K.C பாலு  உள்ளிட்டோர்  வேட்பாளர்களாக  களம்  இறங்க  திட்டமிட்டுள்ளனர் ..

சாதி வாரி கணக்கெடுப்பு

 மார்ச் 3 : வரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கிறது
அதற்குள் நம் சாதியின் சரியான பெயரை நாம் சரிபார்க்க வேண்டும் . ஒவ்வொருவரது சாதி சான்றிதழில் கீழ்க்கண்ட வெவ்வேறு பெயர்கள்
உள்ளன
கொங்கு வெள்ளாள கவுண்டர்..?

கொங்கு வேளாள கவுண்டர்..?

கொங்கு வெள்ளாளர்..?

கொங்கு வேளாளர்..?

வெள்ளாள கவுண்டர்..?

இதில்
சரியான பெயர் எது? என்று கண்டறிய நமது சாதியின் தெளிவான கூட்டங்கள்
பட்டியல் ,கொங்கு வரலாறு போன்றவற்றை ஆராய்ந்தாலே சரியான பெயரை நம்மால்
கண்டறிய முடியும் .இது நம் சமுகத்துக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை .
மூன்று மாதங்களே உள்ளது விரைந்து செயல்பட்டால் குழப்பத்தை தவிர்க்க
முடியும் .நமது சென்சஸ்!! நமது எதிர்காலம் !!

கொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..?



 மார்ச் 3 : அதிமுக, திமுக இரு அணியிலும் சட்ட மன்ற தேர்தலுக்கு
கூட்டணி அழைப்பு வந்தது..!

அதிமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு தாருங்கள்,
ஆனால்,
உங்களுக்கு எந்த ஒரு தொகுதியும் தர முடியாது..!

அடுத்த ஆட்சி வரும் போது அதாவது இன்னும் 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு

2 அல்லது 3 தொகுதிகள் தருகிறோம்
என்று சொல்லுகையில்,

நம்முடைய ஆதரவு எதற்கு தர வேண்டும்..?
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு எதற்கு..?

இது தான் வருகிற சட்ட மன்ற தேர்தலுக்கு பேசுகிற தோரனையா..?
கொ.மு.க வின் அசுர வளர்ச்சியையும்,நன்மதிப்பையும் பற்றி தெரிந்தும் நடந்து கொள்ளும் விதமா..?
அதற்கு கொ.மு.கவிடம் அதிமுக பேசாமலே இருந்திருக்கலாமே..?
விஜயகாந்த் கட்சி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளுவது ஒரு கேவலமான செயல்..?
விஜயகாந்த் கட்சி வருவதற்கு முன்பு கொ.மு.க இனித்ததோ..?

இப்படி பட்ட அடிப்படை பண்பும்,நாகரீகம் இல்லாதவர்களோடு கூட்டணி வேண்டாம் என்று கொ.மு.க தீர்மானித்தது..!

மறுபுறம்

திமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:

நாங்கள் கொ.மு.க அசுர வளர்ச்சி,நன்மதிப்பையும்,செயல்பாடுகளையும் நன்கு அறிந்தவர்கள்..!
வாய் வழி பேசாமல் செயல் வழியிலே செய்து முடிப்பவர்கள் தான் கொங்குநாடு முன்னேற்ற கழகம்..!

நம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து
7 தொகுதிகளை கொடுத்து நல் ஆதரவும் தந்து உள்ளார்கள்.

அது போக,
நம்மை மிகவும் குறைவாக எடை போட்டு

கொங்குநாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத

அகங்காரம்,
ஆனவம்,
அவம்பாவம்,
பிடித்த அதிமுக ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டி,

நிற்கிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாகை அணிந்து,
திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என்ற
சுளுரை ஏற்போம்..!

திமுக வுடன் கொமு க கூட்டணி



 மார்ச் 3 : கொங்கு நாட்டு காவலர்  மரியாதைக்குரிய  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா  அவர்களும்  நமது   கொங்கு நாட்டு தளபதி  திரு . E .R .ஈஸ்வரன்  அண்ணன்  அவர்களும்  நமது  கழக  பொருளாளர்   திரு. பாலசுப்ரமணியம்  அண்ணன்  அவர்களது முன்னிலையில்  நமது கட்சியின்  கூட்டணி பற்றி  திமுக வுடனும் ஆதிமுக வுடனும்  கடந்த  1  மாத காலம்  நடைபெற்றது.
                                                                                                            
                                                                                                              ஆதிமுக தரப்பிலே  நமக்கு  3  சட்ட மன்ற தொகுதிகள்  தருவதாக கூறினர் , ஆனால்  நாம் கேட்ட தொகுதிகளை  தர மறுத்துவிட்டனர் ..     திமுக  தரப்பிலே  நமக்கு  5   சட்ட மன்ற தொகுதிகள் தருவதாக கூறினர் , அதுவும் நாம் கேட்ட தொகுதிகளை தருகின்றோம்  என்றும்  நமது கோரிக்கையையும் அவர்கள்  ஏற்றுகொண்டார்கள்  . பிறகு இரு கட்சிகளுடனும்  சுமார் 1  மாத காலம்  பேச்சுவார்த்தை  நடத்தினார்கள் ....கடந்த மார்ச் 1 ம்  தேதி  தேர்தல் நாள்( ஏப்ரல் 13 )  வெளியிடப்பட்டது . பிறகு மார்ச் 2 ம்  நாள் நமது கூட்டணி பற்றி  சென்னையில்   மாநில பொது குழு  கூட்டம்  நடைபெற்றது ....இறுதியில்
திமுக  வுடன்  கூட்டணி  என்று  நமது கட்சி தலைவர்கள்  முடிவெடுத்தனர் .

                                                                            அன்று  இரவு 11  மணி அளவில்  கலைஞரின்  இல்லத்திற்கு   சென்று  நமது  தலைவர்  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா அவர்கள் கூட்டணி  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார் ....

  திமுக வில்   நமக்கு  7   சட்ட மன்ற தொகுதிகள் + 1 சட்ட மேலவை உறுப்பினர் (MLC) சீட்டுகள்   நமக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது ....